என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே !


பிறந்த நாள் ஜேசுவின் பிறந்த நாள்
என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே
மகிழ்ந்திடுவோம்  நாங்கள் கொண்டாடுவோம்
உலகத்தின் அரசன் பிறந்துள்ளார்
ஏழ்மை வடிவில் பிறந்துள்ளார்
பலகோடி ஆண்டுகள் எதிர்பார்க்கபட்ட
மானிட மகன்  பிறந்துள்ளார்
கோடி நட்சத்திரங்கள் ஒளிந்திட ஒளியின் மகன்  பிறந்துள்ளார்
மகிழ்ந்திடுவோம்  நாங்கள் கொண்டாடுவோம்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

Read More

தீபாவளி செயற்கை கோள் வரைபடமும் நிரூபணம் ஆகும் வசனம் !

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை வெளியிட்டது. கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று ‌எடுக்கப்பட்ட படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது துல்லியமாக தெரிந்தது.இவற்றை தவிர இந்தியாவை‌ ஒட்டியுள்ள பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரைபடங்களும் இவற்றின் எல்லைப்பகுதிகளும் துல்லியமாக காட்சியளித்தன.இது அண்மைய செய்தி .

 இப் படத்தின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதபட்ட வேத வசனம் உண்மை விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.  மனிதக்  கைகளால்  ஆன செயற்கை கோள்வாயிலாக    இவ்வளவு  செய்ய முடியும் போது இறைவனுக்கு ''படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.''  என்ற வசனம் உண்மை என்பது நிரூபணம் ஆகின்றது 


எபிரே. 4:12-13

சகோதர,சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீரதூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும். மும் 
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Read More

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன?

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா? என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம்.</

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Read More

எந்தன் பாவத்தின் முட்கள் பெருகியதால் உந்தன் சிரசில் முள்முடி தைத்தேன்

தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்கள இல் இருந்து பாடல் உலகத்தின் இரட்சகரே  இவரது தளம் http://frpaulrobinson.tamilgoodnews.com/
Read More

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?



 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ?

2 தெசலோனிக்கேயர் 2

 2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்கதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 
இவ் வசனத்தின் முதலில்   கேட்டின் மகனாகிய பாவமனுஷன்
வெளிப்படவேண்டும். அதற்காண  ஆயதங்கள் தற்பொழுது உலகத்தில் நடை பெற்றுக் கொண்டிருகிறது. The Satanic Bible 1969 இல் எழுத பட்டு அதற்கான ஆலயம் சின்னம் என்பன உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்களது சின்னம் யூதர்களின் நட்சத்திரதை கேலி  செய்வது  போல அமைத்து  இருகின்றனர் .உலகில் பல மதங்கள் உள்ளன ஏன்   யூதர்களின் நட்சத்திரதை போல அமைக்க வேண்டும் ? 
குறிப்பு ;( The Satanic Bible என google இல் தேடினால் காண முடியும்.)
காரணம் கண்க 
 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)

இதில் இருந்து இஸ்ரவேலின் தெய்வமே உண்மை தெய்வம். எனவே அவருக்கு எதிரியான கேட்டின் மகனாகிய பாவமனுஷன் கத்தரால் தாவீது அரசருக்கு அருளப்பட்ட நட்சத்திர சின்னதை கேலி செய்வது போல அமைத்ததுடன் .மேலுள்ள வேத  வசனம் நிறைவேற தன்னைத்தான் தேவனென்று காண்பிக்க  தேவ  சின்னதை போல அமைத்தான் .காண்க (தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்)


எனவே நாம் இறுதிகாலத்தில் வாழ்கின்றோம் என உறுதியாக அறிந்து கொள்ளலாம்.
(உரோ.13:11)
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Read More

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!



தந்தை பால்றோபின்சன் அவர்கள் இலங்கை தமிழ் கதோலிக்க ஒரு தேவமனிதர் இவரது பங்கு மட்டக்களப்பில் உள்ள தேத்தாதீவு வில் உள்ளது இவரது செய்திகளை பாடல்களை இத்தளத்தில் நீங்கள் காணலாம்.http://frpaulrobinson.tamilgoodnews.com/
தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்களஇல் இருந்து பாடல் என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!


என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்...
அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....
அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்...
அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....

பாவஅறிக்கை நான் செய்யவில்லை...
பாவி உன் அன்பை மறந்தேனையா!
பாவஅறிக்கை நான் செய்யவில்லை...
பாவி உன் அன்பை மறந்தேனையா!

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது...
அனுதினம் தீமையை நினைக்கின்றது..
ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது...
அனுதினம் தீமையை நினைக்கின்றது..

களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது....
பாவி உன் அன்பை மறந்தேனையா!
களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது....
பாவி உன் அன்பை மறந்தேனையா!

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....
கூந்தலால் துடைக்கின்றேன்
Read More

ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் !

அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர்  விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவில் கோரியபடி '' இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் ஈழ தமிழர்  விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்  ''  அனைவரும் செபித்தமைக்கு எனது நன்றி கத்தர் தங்களது செபத்தை கேட்டு இதுவரை இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் இன்று அறிக்கையாக வெளிவந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து  ஈழ  தமிழருக்காக செபித்து வாருங்கள் 
கத்தருக்கு நன்றி  தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Read More

கிறிஸ்தவர்களை உளவு பார்க்க சென்றவர்' தீர்க்கதரிசியானது எப்படி ?

கிறிஸ்தவர்களை உளவு பார்க்க சென்றவர்' தீர்க்கதரிசியானது எப்படி ?

Read More

வேத ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் கேட்க

வேத ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் கேட்க
இங்கே 
Read More

உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.

இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம்  நிலவுகின்றது எனவும் இலங்கை தமிழர் மிக சந்தோசமாக வாழ்கின்றனர் என கூறிவருகின்றனர் .ஆனால் அங்கோ ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் என கண்காணிக்க படுவதுடன் பல அடக்குமுறை இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை . அதானால் தான் அன்று  ஜேசு கூறினார்

யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உ ங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

                       
                            இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்  

 தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

ஜெபத்தோட்ட ஜெயக்கீதங்கள் vol 13 இல் இருந்தது 

கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே
  இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

1. துப்பாக்கி ஏந்தும் கைகள்-‍ உம்
    வேதம் ஏந்த வேண்டும்
    தப்பாமல் உம் விருப்பம்
    எப்போதும் செய்ய வேண்டும்

2. பழிக்கு பழி வாங்கும்(எபி 10:30)
    பகைமை ஒழிய வேண்டும்
    மன்னிக்கும் மனப்பான்மை (எபே4:32)
    தேசத்தில் மலர வேண்டும் 

3. பிரிந்த குடும்பமெல்லாம்
    மறுபடி இணைய வேண்டும்
    பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
    களிப்பாய் மாற வேண்டும்

4. வீடு இழந்தவர்கள்
    இடங்கள் பெயர்ந்தவர்கள்
    மறுவாழ்வு பெற வேண்டும்
    மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்



Read More

அனைத்து கிறஸ்தவ தொலை கட்சியை காண

அனைத்து  கிறிஸ்தவ  தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க

இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண  http://www.tcnlnet.com/tcnl-tv.html

 

Read More

நரகத்தின் வாசல் இதுதானோ ?

சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல் படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா ?

ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரெனத் தோன்றிய இந்தத் துளையில்(ஓட்டையில்) இருந்து எப்போதும் தீ பிளம்பு கக்கியவண்ணம் உள்ளது. இது எரிமலை அல்ல. எப்போதும் எரிந்துகொண்டு இருக்கும் இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.




























 நரகத்தை பற்றி இறைவன் தளத்திலிருந்து 

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Read More

உனக்கு உதவி செய்யும் தெய்வம்


வாழ்க்கையில்  ஏற்படும் பலவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தையும் உனக்காக அநுபவித்து உன் கூடவே வரும்  ஒரே  ஒரு தெய்வம்  ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை நான் உன்னை கைவிடுவதும் இல்லை’ (எபி.13:5).



>உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Read More

செபிப்பது எப்படி ??


செபிப்பது என்பது  எப்படி ? செபிக்கும் முறை ,செபத்தின் வகைகள் 


ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Read More

விண்ணப்பத்தை கேட்டருளும்

விண்ணப்பத்தை கேட்டருளும் 
விண்ணில் வாழும் ஜேசு தேவா
 விண்ணப்பத்தை கேட்டருளும்
 விண்ணில் வாழும் ஜேசு தேவா 
வா வா தேவா வா வா தேவா
வா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா 
வா வா தேவா வா வா தேவா வா வா தேவா
 என் மனக் கோவிலில் வா தேவா
 அப்பா பிதாவே அன்பான தேவா  மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே  அப்பா பிதாவே அன்பான தேவா  மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே 
அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும் 
அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும்
விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும்ஜேசு தேவா ......
துன்பம் துயரங்கள் சூழ்ந்திடும் வேளை மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள் (2)
ஆவியில் புதுப் படைப்பாய் ஆகிடவே  மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள்(2)

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Read More

பில்லி சூனியம், ஏவல், ஜாதகம்

ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள்  பலர்.  இந்த காரியத்தில் சில கிறிஸ்தவர்களும் ஈடுபடுகிறனர்.   காரணம் விசுவாச குறைவு அத்துடன் இந்துகள் மத்தியில் வாழுவதால் அவர்களை பின்பற்றுகின்றனர்.  எதுவாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் இக்காரியங்களில் ஈடுபடுவது தேவ கோபத்தை ஏற்படுத்தும்,  இவை அனைத்தும் தேவனுக்கு விரோதம் ஆனவை .
                                              இக்காரியங்களை பற்றி மிக விளக்கமாக பரலோகபாதை என்னும் வலைப்பூவில் எழுதியுள்ளார். இவ் வலைப்பதிவு ஆசிரியருக்கு எனது நன்றி எனது வாழ்த்துக்கள்
இதோ லிங்  இங்கே 



ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Read More

எனது கை தொலைபேசி

அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது.  எனவே ஒரு புதிய ஒரு கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு விட்டேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக  எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இறுதியில் அவரது குரல் மிகவும் பரிட்சியமாக இருந்து. எனவே அவரிடம் வினவினேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
                              இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.  இதோ வேத வசனம்  
யோவா 10: 27
 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.  
தேவனின் குரலை கேட்பது எப்படி ?

அன்றாடம் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சி வேண்ட வேண்டும் .இதன் மூலம் உங்களது குரல் தேவனுக்கு பரிட்சியமாகும் .பின்னர் தேவனது குரல் உங்களுக்கு பரிட்சியமாகும்.நீங்களும் தேவனின் குரலை கேட்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேதாகாமம் ஒரு கை தொலைபேசி போன்றது.வேதாகாமத்தை  வாசிப்பதன் மூலமும் தேவனை அறிவதுடன் அவரது குரலையும் நீங்களும் கேட்கலாம்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


Read More

எனது கை தொலைபேசி

அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது.  எனவே ஒரு புதிய  கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக  எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இறுதியில் அவரது குரல் மிகவும் பரிட்சியமாக இருந்தது. எனவே அவரிடம் வினவினேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
                              இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.  இதோ வேத வசனம்  
யோவா 10: 27
 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.  
தேவனின் குரலை கேட்பது எப்படி ?

அன்றாடம் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சி வேண்ட வேண்டும் .இதன் மூலம் உங்களது குரல் தேவனுக்கு பரிட்சியமாகும் .பின்னர் தேவனது குரல் உங்களுக்கு பரிட்சியமாகும்.நீங்களும் தேவனின் குரலை கேட்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேதாகாமம் ஒரு கை தொலைபேசி போன்றது.வேதாகாமத்தை  வாசிப்பதன் மூலமும் தேவனை அறிவதுடன் அவரது குரலையும் நீங்களும் கேட்கலாம்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


Read More

இறுதி கால நற்செய்தி

Angel டிவி இன் இறுதி கால நற்செய்தியை தரவிறக்க http://www.jesusministries.org/endtime_tract.php?reloaded=true
Read More

நான் அவர்களை கைவிடுவதில்லை

 கிறீஸ்த்துவை பின்பற்றி வாழுதல் என்பது  இலேசான காரியம் இல்லை என்னை போன்ற  சிலர் சிறிய துன்பம் ஏற்பட்டவுடன் கிறீஸ்த்துவை விட்டு விலகி விடுவர்.  அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் எப்படி துன்பங்களை வெற்றி கொள்வது? என புனித பிரிஜித்தாவிற்கு கூறிய​வை.
எனது பகைவர்கள் மிகக் கொடிய காட்டு விலங்குகள் போல நிறைவு பெறுவதுமில்லை ஓய்வு எடுப்பதுமில்லை. அவர்களது இதயம் எனது அன்பைப்பற்றி அறியாததால் அவர்களுக்கு எனது துயரமிக்க பாடுகள் கொஞ்சம் கூட நினைவுக்கு வருவதில்லை. அவர்களில் ஒருவரது இதயம் கூட ஒருமுறையேனும் ஆண்டவரே நீர் எங்களை மீட்டுக் கொண்டீர் உமது துயரமிக்க பாடுகளுக்காக நீர் போற்றப்படுவீராக! என்ற வார்த்தைகளை தப்பித் தவறிக்கூட கூறியதில்லை. என்மீது தெய்வீக அன்பில்லாத எதிரிகளின் இதயங்களில் என் ஆன்மா எவ்வாறு குடிகொள்ள முடியும்? இவர்கள் தங்கள் விருப்பத்திற்காக அடுத்தவர்களுக்கு எளிதாக நம்பிக்கை துரோகம் செய்கிறார்களே! அவர்களின் இதயம் உலக ஆசையெனும் வஞ்சகப் புழுக்களால் நிறைந்துள்ளது.

சாத்தான் அவனது தீமைகளை அவர்களது வாயில் வைத்துள்ளான். அதனால் என் வார்த்தைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் போனது. மேலும் என் எதிரிகளை என் நண்பர்களிடமிருந்து இரம்பத்தால் அறுப்பதைப்போல அறுத்து எடுக்க வேண்டியுள்ளது. இரம்பத்தால் அறுபட்டுச் சாவதைவிட கொடுமையான சாவு வேறெதுவுமில்லை. அவர்கள் அனைத்துவித தண்டனைகளுக்கும் ஆளானவர்கள், சாத்தான் அவர்களை இரம்பத்தால் அறுப்பான் என்னிடமிருந்தும் அவர்கள் அறுபட்டுப் போவர்கள் ஆகவே இரண்டு பக்கமும் அறுபடுவார்கள். என் எதிரிகளால் அவர்களைச் சேர்ந்தவர்களும் என்னிடமிருந்து அறுபட்டுப்போவதால் அவர்கள் எனது மிகுதியான வெறுப்புக்குள்ளானவர்கள்.

இக் காரணங்களுக்காகவும் சாத்தான் எனது உண்மையான பகைவனாக இருப்பதாலும் அவனிடமிருந்து என் மக்களை பிரிப்பதற்காக நான் எனது நண்பர்களை அனுப்புகின்றேன். அவர்களை போருக்குப் புறப்படும் படை வீரர்களைப்போல அனுப்புகிறேன். தீயவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எனக்காக தன்னுயிரைத் தருபவரே எனது உண்மையான படைவீரர். என் வாயினின்று வரும் வாரத்தைகளை அவரகள் ஈட்டியாகப் பயன்படுத்துவாரகள் அவரகளது கைகளில் நம்பிக்கை என்னும் போரவாளை வைத்திருப்பார்கள். அவர்களது மார்பு எனது அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்து இருப்பதால் என்ன நடந்தாலும் என் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு குறைந்துவிடாது. நடப்பவை அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள பொறுமை என்னும் பாதுகாப்பு கவசத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். தங்கத்தைப் பாதுகாப்பது போல நான் அவர்களை மூடி வைத்துள்ளேன்: இப்போது எனது வழியில் அவர்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்.

நீதிமுறைகளின்படி நான் மனிதனாகப் பிறந்து பாடுகளை அனுபவிக்காமல் இருந்திருந்தால் மேன்மை மிகுந்த எனது அரசாட்சியில் நானே நுழைந்திருக்க முடியாமல் போயிருக்கும். அப்படியிருக்க என் நண்பர்கள் எப்படி நுழைய முடியும்? அவர்களது ஆண்டவரான நானே துன்பத்திற்குள்ளானேன் அப்படியிருக்க அவர்கள் துன்பப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
அவர்களது ஆண்டவரான நான் சாட்டையால் அடிக்கப்பட்டேன் என்றால் அடுத்தவர் கூறும் வார்த்தைகளால் அவர்கள் அடிபடுவது ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை ஏனென்றால் நான் அவர்களைக் கைவிடுவதில்லை.

சாத்தானால் கடவுளது இதயத்தை எடுக்கவோ அவரிடமிருந்து அதைப் பிரிக்கவோ இயலாது. அதைப்போலவே என்னிடமிருந்து அவன் என் மக்களைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே எனது பார்வையில் என் நண்பர்கள் தூய தங்கத்திற்கு ஈடானவர்கள் சிறிதளவு நெருப்பில் அவர்கள் சோதிக்கப்பட்டாலும் அவர்களை நான் கைவிடுவதில்லை அவ்வாறு சோதிக்கப்படுவது அவர்களது மேன்மைக்கான செயலாகும்.
காண்க http://www.prophecyfilm.com/tamil/revelations/book1/b1_chapter6.htm 
அவர்களை நான் கைவிடுவதில்லை 

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Read More

ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்

இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி 
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது ! 
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள் 

 நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம்  உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம்  பெயர்த்திடுவோம் 
ஒற்றுமையை  வளர்த்து  இலக்கை வென்றிடுவோம்.
Read More

உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

 

இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு    மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே  செய்தது'' .  இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?



இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக  தாக்கி கொண்டு செல்லும்  போது,  புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை  உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும்   அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும்  இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த இந்திய மதிய அரசு யாருமே  செய்ய    துணியாத ஒரு   கிழ்த்தரமான   இன அழிப்பை   தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாவர்களை  ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள்  உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?) இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர்  குற்ற  வழக்கை  இலங்கைக்கு  உள்ளே  நடத்தும்  படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது. 


புலிகளை  ஒழித்து விட்டால் தமிழர்கள் போராட மாட்டார்கள் என கனவு கண்ட சர்வதேசம் புலம் பெயர் தமிழர் எழுற்ச்சியுடன் முன்னெடுக்கும் போராடம் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த எழுற்சியை குறைக்க இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் மறுபடியும் ஒன்று  சேர்ந்து  சதித்திட்டம் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் அறிகுறியே அடுக்கடுக்காக இலங்கைக்கு செல்வதும்,  இலங்கை அரசை  எதிர்த்து அறிக்கை விடுவது. உறுதிமொழி. வழங்குவது என தொடர்கிறது .
நல்ல உதாரணம் : கொலைர் தமிழகத்தில் அரை நாள் உண்ணாவிரதம் என தமிழரை ம்பவைத்து ஏமாற்றியது. தமிழர் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதே பாணியில் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள்  களம் இறங்கியுள்ளது .பல வருடங்களாக நம்பி ஏமாந்தது போதும்.எமக்கு நீதி கிடைக்கும்  வரை ஒற்றுமையுடன் மிகுந்த விழிப்பாக போராடுவது ஒவொரு தமிழனின்  கைகளில் தங்கியுள்ளது. 
                          ஹ ஹ யார் அந்த சிங்க சொங்?
                    படத்தை  பாருங்கள்  பதில்  புரியும்
Read More

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது 2012 அல்லது 2060 ??

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது  2012 அல்லது  2060

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Read More

அருளின் வடிவம்

உம்மைக் கண்டாலே என்றும்   ஆனந்தமையா 
உம்மை புகழ்ந்தால் என் நாவு  இனிமையாகும்  
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை 
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது 
என் கைகள்  உம்மையே  வேண்டி  நிற்கிறது 
எங்கும் இருப்பவர் நீரே

என் குறைகளைத் தீர்ப்பவர் நீரே 
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே 
அன்பாய்  என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே 
அவனியில் உம் அன்புக்கு  நிகர் யாரு?

Read More

உங்களது ஆயுளை அறிவோம் வாங்க

இந்த  உலகத்தில்  பிறந்த  அனைவரும்   நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.  நாம் இத்தப்  பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வேம்  என அறியும்  ஆவல்  அனைத்து மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. அதனால் தான் அனைத்து சோதிடர்களும் ஆயுளை  கணித்து சொல்லுவதை  வழக்கமாகக்  கொண்டுள்ளார்கள்.  நீங்கள் எவ்வளவு காலம் உலகத்தில் வாழ்வீர்கள் என அறிந்து சொல்ல    ஒரு தளம் உள்ளது இத்தளத்தில் உங்களது வயது நீங்கள் வசிக்கும் நாடு உங்களுக்குள்ள வியாதிகள் .. என பல கேள்விகள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி முடித்தவுடன் உங்களது ஆயுளை  கணித்து   சொல்லும் மேலும்  இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லாமல் உங்களது  நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மற்றும் பல பயனுள்ள தகவல்கள் இத்தளத்தில்  காணபடுகிறது ;

Read More

Angel tv இன் புதிய ஆண்டு 2012 நேரலை திர்க்கதரிசன ஆராதனை

புதிய ஆண்டு 2012  நேரலை திர்க்கதரிசன
Read More

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

                                       உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்
சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில்  புடுங்குவது  போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய  வார்த்தைகளாலும்,  ஏசி உங்களை விரக்த்தியின்  விளிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே  இல்லையே! நான்  சொல்வதை  யாரும் கேட்கவில்லையே , எல்லோரும்    எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த  மனிதனையும் விரக்த்தியின்  விளிம்புக்கு கொண்டு போகிறது. 
நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும், ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்




.'' என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்''  என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு  மிதியடியும்,  அணியுங்கள்  கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து  விருந்து  கொண்டாடுவோம் 
ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும்  உயிர்  பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான்.  மிண்டும்  கிடைத்துள்ளான்'' என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம்  22-25 ) ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் . உங்களது தேவைகளுக்காக எப்படி செபிப்பது   என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட  வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இரண்டு  தளம் உள்ளது.



1) இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி  சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம் அத்துடன் ஜெப அறையில் நீங்களும்    செபித்து உங்களது தேவைகளை பெற்று கொள்ளுங்கள் இந்த ஜெப அறையில் எப்பொதும் நீங்கள் தனிமையில் இல்லை. இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அறையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது. எனவே நீங்கள் தனியாகவில்லை  அத்துடன் இந்த தளத்தில் வடிவமைப்பு என்னை பிரமிக்க வைத்ததுடன் உண்ணர்வை தளத்துடன் ஒன்றிக்க வைக்கின்றது  link http://www.catholicpentecostmission.in/prayer_room.html

 2) இத்தளத்தில் உங்களது செபத்தேவை என்ன என்பதை தெரிவு  செய்து  அந்த சகோதரன் செபிக்கும்  போது   நீங்களும்  விசுவாசத்துடன் செபித்து அற்புதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இத்தளத்தில் Tamil    — > Bro. Appadurai    — > go என்பதை கிளிக் பண்ணவும்   link http://www.prayermountain.in/Home/Audio_Prayer.php


இரண்டு  தளங்களில் உங்களுக்கு விரும்பியதில் இணைத்து அற்புதத்தை பெற்று கொள்ளுங்கள்  உங்களை கத்தர் ஜேசு நிறைவாக  ஆசிர்வதிப்பாராக. ஆமென் 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Read More