கடவுள்கள் யார்? மறைக்கப்படும் இரகசியங்கள்

பூமியில் உலாவும் வேற்றுக்கிரகவாசிகள்! கடவுள்கள் யார்? மறைக்கப்படும் இரகசியங்கள்

பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ?

பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ? மூலம் உங்களது கணனியில் இடத்தை சேமிக்கலாம் 

புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது !


விடுதலைப் புலிகள் மேல் இருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இன்று காலை 11.00 மணிக்கு நீக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை என்றும். அவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடாத காரணத்தால் அவர்கள் மீது உள்ள தடையை தாம் நீக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று காலை 11.00 மணி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 22 நாடுகளிலும் இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது. இனி விடுதலைப் புலிகளின் பணத்தை முடக்கவோ இல்லை, விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்று கூறி கைதுசெய்யவே ஐரோப்பிய நாடுகளுக்கு உரிமை இல்லை. அத்தோடு விடுதலைப் புலிகளின் கொடியை பாவிக்க எந்த ஒரு தடையும் இல்லை. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிய உள்ளது. இருப்பினும் தற்போது அது இணைந்துள்ள காரணத்தால், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டும். எனவே இன்று முதல் பிரித்தானியாவிலும் புலிகளுக்கு தடை இல்லை. அத்தோடு தமிழர்கள் இனி மாவீரர் தினத்தை நேரடியாக கொண்டாட முடியும். புலிகளை இதுவரை காலமும் பயங்கரவாதிகள் என்று கூறிவந்த நபர்கள் இனி அந்த சொல்லை பாவிக்க முடியாது. அது போக , இனி ஐரோப்பிய நாடுகள் எங்கேயும் புலிகளின் கொடி உயரப் பறக்கலாம் !

ஜூலியின் மூக்கை உடைத்த விஜய் டிவி: அந்த 5 நொடி வீடியோ இதுதான்

ஓவியா அப்படி சொன்னாக்கா, அதுக்கு முன்னால ஒரு 5 நொடிக்கு முன்னால அவ சொன்னாக்கா, என்று கதறி அழுது வழக்கம்போல் தனது பொய் நாடகத்தை அரங்கேற்றியவர் ஜூலி என்பது அனைவரும் அறிந்ததே. ஓவியா குற்றமற்றவர், அவர் யாரையும் புறம் கூறவில்லை என்பதை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட பின்னரும் ஜூலி வேண்டுமென்றே அந்த வீடியோ இருக்குது என்று கூறி அனைவரையும் கடுப்பாக்கினார்.

உலக முஸ்லிம்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் ???

துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்துகான் தனது வளைகுடா சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியா வந்தார் சவுதி அரேபியா தலைவர்களை சந்தித்த அவர் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, அல் அக்ஸா பள்ளியில் இஸ்றேல் நடத்தி வரும் அடாவடி தனம் பற்றி கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு பதில் அழித்த அவர், அல்அக்ஸா பள்ளி உலக முஸ்லிம்களின் புனி தலம் என்றும் இந்த புனித தலத்தின் விசயத்தில் இஸ்றேல் கட்டவிழ்த்துவிடும் அடாவடி தனங்களுக்கு எதிராக உலக முஸ்லிம்கள் நீண்ட நாள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் இஸ்றேலை எச்சரித்தார்

ரோல் செய்வது எப்படி

ரோல் செய்வது எப்படி?

அரசியல் தீர்வு பாதிக்கப்படலாம்! – விக்னேஸ்வரன்

அரசியல் ரீதியான தீர்வு எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம், அரசியல் ரீதியான நிலைமையை சீராக்காது என வட மாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை நேற்று தமது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், அரசியல் ரீதியான தீர்வு எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம், அரசியல் ரீதியான நிலைமையை சீராக்காது. மாறாக பலவீனமான இடத்திற்கே கொண்டு செல்லும். பொருளாதார ரீதியில் சில விடயங்களை பெற்று விட்டால் அரசியல் தீர்வுகளை பெற முடியாமல் போவதற்கு இடமுண்டு. எனவே இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் குறிப்பிடுவதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பதில் வழங்கியுள்ளார் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழத்தில் இல்லுமினாட்டியின் BIG BOSS மறைமுக திட்டம் அம்பலம்

Big boss vijay tv show  மறைமுக திட்டம். ஏன் இந்த நிகழ்ச்சி இதன் தாற்பரியம் என்ன ?  இதன் பிண்ணனி  என்பவற்றை அக்கு வேறு ஆணி வேறாக விளங்கி கொள்ள இங்கே 

ஆண்மைக்குறைபாட்டை குணப்பபடுத்த

இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மைக் குறைபாடு பிரச்சினையில் சிக்கித்தவிக்கின்றனர். எனினும் ஆண்மைக்குறைபாட்டை எளிய முறையில் குணப்படுத்த முடியும்

அதிகமாக தூக்க மாத்திரைகள் அல்லது போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்மைக்குறைவு ஏற்படும். தேவையில்லாத மாத்திரைகளை தவிர்ப்பதன்மூலம் ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்.

இரத்தத்தில் சர்க்கரையளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம்.

மது அருந்துவதன் மூலம் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும்.எனவே மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம் புகைப்பழக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆண்மைக்குறைவு ஏற்படும்.புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதன் மூலம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.

உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமல் போகும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.

உருளைக்கிழங்கு செடி மீது தக்காளி ஓட்டுதல்

உருளைக்கிழங்கு செடி மீது தக்காளி ஓட்டுதல் இந்த ஒட்டு முறை 100 % வெற்றிகரமாக அமைந்தது

பிரபாகரன் உயிருடன் இருப்பது 100% உண்மை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2018 போர் நடுத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார். எதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது. இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிரபாகரன் அதீத பலத்துடன் இருப்பார்கள் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விடயத்தில் அமைதிகாத்து வருகிறது. போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு மூன்பே பிரபாகரன் தனது நட்புநாடுகளுடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகுதியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது…

தமிழ்த் தேசியத்திற்கு பேரிழப்பு ஓவியர் சந்தானம் அவர்களின் மறைவு

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர், தூரிகையாளர், மாந்தநேயமிக்கவர் என பன்முகங்களைக் கொண்ட ஓவியர் வீரசந்தானம் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ் உணர்வாளர்களும், அரசியல்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஓவியர் வீரசந்தானம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் "ஓவியர் வீரசந்தானம் அவர்கள் நேற்று மாலை (13-07-2017)திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார் என்னும் தகவல் பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் நாடுபோற்றும் தலைசிறந்த ஓவியப் படைப்பாளர். கண்ணைக் கவரும் கலைநயம் சிந்தும் கருத்தாழம் மிக்க கோட்டோவிங்களைப் படைப்பதில் வல்லவர். அவர் ஒரு ஓவியக் கலைஞராக மட்டுமின்றி, அதிதீவிரமான தமிழ்த்தேசிய உணர்வாளராக, துணிவாகக் களமிறங்கிச் செயலாற்றும் போராளியாக விளங்கியவர். தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் உரத்துக் குரலெழுப்பியவர். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடியவர். விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர். இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியவர். தமிழ்நாட்டை தனிநாடாக வென்றெடுக்க வேண்டுமென்னும் கருத்தை ஓங்கி முழங்கியவர். தமிழ்த்தேசியப் போராட்டக் களத்தில் எப்போதும் முன்னணியில் நின்றவர். உலகத்தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர். விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுத்த "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்" அனைத்துப் போராட்டக் களங்களிலும் மிகவும் தீவிரமாகப் பங்கேற்றவர். சிங்கள இனவெறியர்கள் நடத்திய இனப்படுகொலையின் பேரவலத்தைச் சித்தரிக்கும் 'முள்ளிவாய்க்கால் முற்றம்' என்னும் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றியவர். அவருடைய இழப்பு தமிழ்த்தேசியக் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.

சர்வ மத பிராத்தனை கிஸ்தவர்களுக்கு உகந்ததா ?

சர்வ மத பிராத்தனை கிஸ்தவர்களுக்கு உகந்ததா ?

குழந்தை பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்

அடுத்த 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்காக குடும்பம் நடத்தும் முறை வழக்கொழிந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்ளலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறையின் இயக்குனராக உள்ளவர் ஹாங்க் கிரேலி.

இவர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தையை உருவாக்கும் முறை மற்றும் உயிரின் உருவாக்கம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தனது பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தம்பதிகள் தங்கள் டிஎன்ஏ-வை வைத்து ஆய்வகங்களில் கருவை வடிவமைக்கும் முறை இன்னும் முப்பது ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி விடும் என்றார்.

பெண்ணின்
தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம் என்றும், அதன்மூலமாக இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம் எனவும், பின் அந்த முட்டைகள் மூலமாக ஆணின் ஸ்டெம் செல்களை சேர்த்து குழந்தையை உருவாக்கலாம் என்றும் கிரேலி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தையை தாங்களே டிசைன் செய்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த முறை தற்போதே சாத்தியம் என்று கூறிய அவர், இன்னும் 30 ஆண்டுகளில் இந்த முறையை மிகவும் குறைந்த விலையில், உயர்ரக தொழில்நுட்பத்தில் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின் குழந்தைக்காக உடலுறவு கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமில்லை என்றும் ஆராய்ச்சியாளர் ஹாங்க் கிரேலி தெரிவித்துள்ளார்.