அன்ரோயிட் கைப்பேசிகளில் 3 சிம்கள் பயன்படுத்தலாம்!

தற்போது இரண்டு சிம்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

இருந்தும் இரண்டினை விட கூடிய சிம் கார்ட்டினை பாவிப்பவர்களும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட கைப்பேசிகளை வைத்திருப்பார்கள்.இவர்களது பிரச்சினைக்கு தீர்வாக 3 சிம் கார்ட்டினை பயன்படுத்தக்கூடிய அடப்ரர் (Adapter) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த குழு ஒன்று வடிவமைத்துள்ளது.

ஆப்பிள் மற்றும் அன்ரோயிட் கைப்பேசிகளில் இதனை இணைத்து பயன்படுத்த முடியும்.

எனினும் இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது தொடர்பிலும் விலை தொடர்பிலும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
Read More

ஐரோப்பா வாழ் பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது ஏன்

பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது ஏன்
Read More

அனைவருக்கும் முதலமைச்சர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்

அண்மையில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசக்கட்சியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடிகளும் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையும் ஓந்துள்ள நிலையில் அது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆதரவாக செயற்பட்ட அனைவருக்கும் முதலமைச்சர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் அது தொடர்பாக முதலமைச்சரின் அறிக்கையில்.

மக்களுக்கு நன்றி



எனதினிய தமிழ் நெஞ்சங்களே!
அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.

முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.

இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.

மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.

நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.

ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.

ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.

இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்! முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின. நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன். உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
Read More

சீமானை ஊடகங்களில் காட்டாதீர்

 சீமானை ஊடகங்களில் காட்டாதீர் .சீமான் ஒரு இன வெறியன்
Read More

கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும்

கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும் தேசத்தில் நடக்கும் திடுக்கிடும்  உண்மை இனி நடக்கபோவது என்ன இதன் பிண்ணனி  என்ன ?
Read More

ஈழம் என்றாலே தடைதான். போராட்டம்தான்!

நீங்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட நபர். எங்கள் நாட்டுக்குள் நீங்கள் செல்ல அனுமதியில்லை மலேசியாவில் இறங்கியதும் விமான நிலையத்தில் வைகோவைப் பார்த்து அந்த அதிகாரி சொன்னார்.

உரிய அனுமதிகள், பரிசோதனைகள், எடுத்துத்தான் மலேசியா செல்வதற்கு அவருக்கு விசா அளிக்கப்பட்டது என்பதால், வைகோ திடுக்கிட்டார்.

நான் முறையான அனுமதி பெற்றுத்தான் வருகிறேன் என ஆவணங்களைக் காட்டுகிறார்.

நீங்கள் இலங்கை குடிமகன்தானே? இது அடுத்த கேள்வி. இல்லை, நான் இந்தியக் குடியுரிமை பெற்றவன். தமிழ் இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்கிறார்.

நீங்கள் எல்.டி.டி.இ அமைப்பைச் சேர்ந்தவர்தானே? நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் அல்ல. அந்த அமைப்பின் ஆதரவாளன்!

அது தடை செய்யப்பட்ட அமைப்புதானே? அதைப் பற்றி இந்த இடத்தில் உங்களிடம் நான் விளக்கம் அளிக்கவோ, விவாதம் செய்யவோ தயாராக இல்லை. சூடாகிறார் வைகோ.

அதிகாரிகள், உங்களை நாட்டுக்குள் அனுப்ப முடியாது எனச் சொல்லி, ஓர் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு நாற்காலியில் உட்காருகிறார் வைகோ. மலேசியாவில் இப்படி வைகோவுக்கு நடப்பது இரண்டாவது முறை.

வைகோவும் மலேசியாவின் பினாங்கு மாகாணத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் இணைந்து பினாங்கில் இரண்டு மாநாடுகள் நடத்தினர்.

ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசு மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு உலகம் முழுக்க நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, உலக நாடுகளின் கவனத்துக்குக்கொண்டு செல்லப்பட்டன.

இது இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், வைகோவை எந்த நாட்டுக்கும் போகவிடாமல் செய்யும் வேலைகளில் இலங்கை அரசு இறங்கியது.

1989-ம் வருடம் ஈழம் சென்று பிரபாகரனுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தார் வைகோ. அப்போது பிரபாகரனும் வைகோவும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடையை வைகோ அணிந்து இருப்பது போல படங்களும் எடுக்கப்பட்டன. அதை ஆதாரமாகக்காட்டி, ‘வைகோ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்’ என்று சொல்லியிருக்கிறதாம் இலங்கை.

இதை வைத்துத்தான் அவர் மலேசியா வுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.2015-லும் மலேசியாவுக்குள் நுழைய விசா தராமல் இழுத்தடித்தார்கள்.

ஆனால், மலேசிய துணைப் பிரதமர் வரை விஷயத்தைக் கொண்டுச் சென்று அனுமதி வாங்கினார்கள். பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, குலசேகரன் எம்.பி ஆகியோர் அதற்கு முயற்சி எடுத்தார்கள்.

அப்போது மலேசிய எம்.பி-க்கள் மத்தியிலும் வைகோ நீண்ட நேரம் பேசினார். அது இலங்கை அரசாங்கத்துக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் இம்முறை எப்படியும் உள்ளே விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக, கடந்த 9-ம் தேதி அதிகாலை தனிச்செயலர் அருணகிரியுடன் சென்னையிலிருந்து கிளம்பி, மலேசியக் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கினார்.

அன்று இரவே திருப்பி அனுப்பப்பட்டார். சாப்பிடக்கூட அவரை அனுமதிக்கவில்லை. அருணகிரி மூலமாக வைகோ உணவை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.

கடுப்பான வைகோ அப்படி ஒன்றும் நான் சாப்பிடத் தேவையில்லை எனச் சொல்லி விட்டார். தண்ணீர் மட்டும் வாங்கி குடித்தார்.

மாலையில் இந்தியத் தூதரக அதிகாரி திருமூர்த்தி, வைகோவைத் தொடர்பு கொண்டு, சாப்பிடாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. என் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பட்டுமா? எனக் கேட்டுள்ளார்.

அதையும் கனிவாக மறுத்து விட்டார். 16 மணி நேரம் கழித்து, சென்னையில் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட்டார்.

இனி வைகோவின் வெளிநாட்டுப் பயணங்கள் எதுவும் சாத்தியம் இல்லை என்றே சொல்கிறார்கள்.

2011 ஜூனில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற வளாகத்தில் இனப் படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அப்போதும் இப்படித்தான் நடந்தது.

தொடர்ச்சியாக வைகோவுக்கு தடைவிதிக்கும் வெவ்வேறு நாடுகளின் முடிவுக்குப் பின்னால் இருப்பது இலங்கைதான்.

இது வைகோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அவமதிக்கும் செயல் எனப் பொங்குகிறார்கள், புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் நிர்வாகிகள்.

தடையை உடைத்து வைகோவை மலேசியாவுக்குள் அழைத்து வருவேன்’ என்று திருமண விழாவில் சொல்லியிருக்கிறார் ராமசாமி.

ஈழம் என்றாலே தடைதான். போராட்டம்தான்!

- Vikatan
Read More

Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது ?



மைக்ரோசொப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்த இயங்குதளமே Windows Phone ஆகும்.

எனினும் இவ் இயங்குதளமானது ஏனைய மொபைல் இயங்குதளங்களைப் போன்று பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறவில்லை.

இவ்வாறிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மற்றுமொரு சேவையான ஸ்கைப் சேவைக்கான அப்பிளிக்கேஷன் எதிர்காலத்தில் Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு கிடைக்காது என அறிவித்துள்ளது.

இது எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.

மேலும் இச் செயற்பாடானது நிரந்தரமானதாகும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் ஒருபோதும் Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்வருமாறு தெரிவித்துள்ளது,

Windows Phone 8, Windows Phone 8.1 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களில் ஸ்கைப் அப்பிளிக்கேஷன் பாவனையில் உள்ளது. எனினும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது. இதற்கு வருந்துகின்றோம் என தெரிவித்துள்ளது.Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது ?
Read More

தொடர்ந்து போராடுவோம் … புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி

தோழர்களுக்கு வணக்கம்,

தமிழினப்படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தடுத்து 17 தோழர்களை சிறைப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் (டைசன், இளமாறன், அருண்) நால்வர் மீதும் ஏவிய குண்டர் சட்டத்தை கண்டித்தும் எதிர்வினையாற்றிய தோழர்கள் அனைவருக்கும் எங்களது புரட்சிகர வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

’தமிழ், தமிழர், தமிழீழம், தமிழ்நாடு’, என்று நமது தேசிய இனத்திற்கான உரிமைகளை பேசுபவர்களை முடக்கவும், சிறைப்படுத்தவும் வெறி பிடித்த மிருகமாய் பாஜக களமிறங்கியிருக்கிறது. ஏனெனில் இந்த முழக்கங்களை முடக்கினால் மட்டுமே “இந்து”, “இந்துத்துவம்” என்ற பாசிச கருத்தியலை தமிழ்நாட்டில் வளர்த்து எடுக்க இயலும் என்று பாஜக- ஆர்.எஸ்.எஸ் கும்பல் நம்புகிறது. ஏனெனில் ’தமிழர்கள் இந்துக்கள் அல்ல’ என்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பல் நன்கு அறியும். ஆகவே தமிழன் எனும் அடையாளத்தை அழித்துவிட்டு ‘இந்து’ எனும் அடையாளத்தை நம்மீது திணிக்கிறது. இந்திய அளவில் இந்த வன்முறைக் கூட்டத்தை உறுதியுடன் எதிர்கொள்பவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்.

பெரியார், அம்பேத்கர் மற்றும் ‘ தேசியத் தலைவர்’ பிரபாகரன் ஆகியோரின் அர்ப்பணிப்பும், அறிவும், அரசியலும், நம்மை இந்த வன்முறைக் கும்பலின் கருத்தியலை அம்பலப்படுத்தவும், தனிமைப்படுத்தவும், தோற்கடிக்கவும் செய்யக்கூடியவர்களாக மாற்றியிருக்கிறது.
இனிவரும் காலத்தில் இந்தக் கும்பலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும். இந்த போராட்டத்தில் தோழமை ஆற்றல்களாக நாம் அனைவரும் கைகோர்த்து களம் காண்போம். எங்கள் மீது பாய்ந்திருக்கும் இந்த அரச அடக்குமுறை எங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது, உறுதிப்படுத்தியிருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் மீதான பற்றுறுதியை மெருகேற்றியிருக்கிறது. இவர்களை வெல்லக்கூடிய வலிமையான வீரர்களாக நாம் அனைவரும் மாறி இருக்கிறோம்.

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது, சமரசமற்றது, தவிர்க்க இயலாதது. இந்த போராட்டத்தின் 2000 வருட வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். அசுர பலத்துடன் வெறிப் பிடித்த மிருகமாய் நம்மைக் குதற காத்திருக்கும் இந்த கூட்டத்தை வேட்டையாடும் பொறுப்பை வரலாறு நமக்கு கொடுத்திருக்கிறது. இத்தகைய வாய்ப்புகள் வரலாற்றில் அரிதாகவே வரும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த அரச அடக்குமுறை மிகத் தீவிரமானதோ, கடினமானதோ அல்ல. நம்முடைய உறுதியின் முன் இது புறக்கணிக்கக்கூடிய, எளிதில் வென்று கடந்து விடக்கூடிய அடக்குமுறையே. எங்களைவிட பல மடங்கு அதீத அடக்குமுறைகளை எதிர்கொண்டு நமக்கான போராட்டத் தளங்களை அமைத்துக் கொடுத்த போராளிகள் பலர் நம் சமகாலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து நமக்கு கிடைத்த அரசியல் பாடங்கள் வழிகாட்டுதலை மேற்கொண்டு போராட்டத்தை மேலும், மேலும் தீவிரமாக்க சபதமேற்போம்.
நினைவேந்தல் என்பது ஒரு சடங்கல்ல. இனப்படுகொலையை வழி, வழியாக நினைவுப்படுத்துவதும், அந்த பேரழிவின் நினைவுகளை அரசியலாக்கி நம்மை கூர்மைப்படுத்துவதற்குமான ஒரு பண்பாட்டு நிகழ்வு. தமிழர் கடலோரத்தில், முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலையை மீண்டும், மீண்டும் நினைவுப்படுத்தி இந்நிகழ்விற்கான நீதியை வென்றெடுக்க நம்மை நாமே தயார் செய்து கொள்ளும் நிகழ்வு. இந்நிகழ்வை வன்முறையாக, அடக்குமுறையை ஏவி பாஜக வும், அதன் பினாமி தமிழக அரசும் முடக்கிவிட முனைகிறது. இந்த தமிழின விரோத நிகழ்வினை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இனி தமிழகமெங்கும் நினைவேந்தல் நிகழ்வினை நாம் துவங்க வேண்டும். தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் வாழும் தமிழர்கள் ‘ஏன் தங்கள் தொப்புள் கொடி’ உறவுகளான ஈழத்தமிழர்கள் பச்சைப் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை உணரச் செய்ய வேண்டும்.

தமிழீழப்படுகொலையை நிகழ்த்திய இலங்கைக்கு கிடைத்த இந்தியாவின் ஒத்துழைப்பே இதுநாள் வரையில் இலங்கை தண்டிக்கப்படாமல் தப்பிப்பதற்கான காரணமாகும். நம்மிடம் வாங்கிய வோட்டுகளை வைத்து, பாராளுமன்றம் மற்றும் மக்கள் மத்தியில் ஒப்புதல் எதையும் பெறாமல் ‘ஆரிய இனவெறி’, ‘ பிராந்திய ஆதிக்க நலன்’, ‘ பொருளாதார- ரானுவ நலன்’ ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சனநாயக விரோதமாக இந்திய அரசு செய்த நடவடிக்கைகளை சக மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய கடமை நமக்குண்டு. நேற்று ஈழத்தில் அக்கிரமங்களைச் செய்த இந்திய அரசு, நாளை நம் மீதும் இதே அநீதிகளை அரங்கேற்றும். எனவே தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது அனைத்து சனநாயக சக்திகளின் போராட்டமே. இதை நாம் வென்றாக வேண்டும். எனவே இந்த அடக்குமுறைகளை கடந்து நாம் நமது போராட்டக் களத்தினை வலுப்படுத்துவோம்.

கடந்த 21ம் தேது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று அரச வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த தோழர். வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), தோழர். மல்லை சத்யா, சுப்ரமணியன், அந்தரிதாஸ் (மதிமுக), ஓவியர் வீரசந்தானம், தோழர். மகேஸ் (மக்கள் மன்றம், காஞ்சி), தோழர். அரங்க குணசேகரன், தோழர். பொழிலன், தோழர். கி.வே. பொன்னையன் (தமிழக மக்கள் முன்னனி), இயக்குனர் தோழர். கெளதமன், வழக்கறிஞர்கள் தோழர். கயல், திருமலை, தோழர். நாகை திருவள்ளுவன் ( தமிழ் புலிகள் கட்சி), தோழர். தபசி (திராவிடர் விடுதலை கழகம்) , வழக்கறிஞர் தோழர் பாவேந்தன் ஆகியோருக்கும்,
தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் என 17 தோழர்களை கடந்த மே 21ம் தேதி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்ததற்கு கண்டனம் தெரிவித்த தோழர். ஜவாஹிருல்லா, தோழர். சீமான், தோழர். ஜீ. ராமகிருஷ்ணன் (சி பி எம்), தோழர். முத்தரசன் தோழர். தெஹ்லான் பார்கவி, தோழர். ரவிக்குமார் மற்றும் அய்யா. பழ. நெடுமாறன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும்,

24ந் தேதி நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்த மதிமுக துணை பொதுச் செயலாளர் தோழர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வேணுகோபால், SDPI கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் தோழர் கரீம், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் அரங்க குணசேகரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் குமரன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி, தமிழர் விடியல் கட்சியின் மாநில மாணவரணி பொறுப்பாளர் தோழர் நவீன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, இயக்குனர் .வ .கௌதமன் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத், பூவுலகின் நண்பர் தோழர் வழக்கறிஞர் சுந்தர்ராஜன், கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தின் தோழர் SP பாலகிருஷ்ணன், புத்தர் கலைக்குழு தோழர் மணிமாறன் தோழர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

குண்டர் சட்டம் ஏவப்பட்டதற்கு எதிராக குரல் கொடுத்த அனைவரின் சனநாயக மறுப்புக்கு எதிரான பதிவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். (குண்டர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து இயக்கங்கள், கட்சிகள், கலைஞர்கள், இயக்குநர்கள், செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் பெயர்கள் இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன https://www.facebook.com/thirumurugan.gandhi/posts/10213129062724723 )
புழல் சிறையில் சிறைப்பட்ட தோழர்களை நேரிடையாக சந்தித்து ஆதரவும், உற்சாகமும் தெரிவித்து, தோழர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்து கொடுத்தும், சிறை மீண்டவுடன் இந்த அடக்குமுறையைக் கண்டித்து ஆதரவளித்த அய்யா. வைகோ அவர்களுக்கும், மே 21ந் தேதி இரவிலிருந்து தொடர்ச்சியாக காவல்துறை, நீதிபதி சந்திப்பு என அனைத்து நகர்விலும் துணை நின்றதும், அடுத்து வந்த நாட்களில் சிறையில் தோழர்களை சந்தித்து உற்சாகமூட்டிய தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புழல் சிறையில் அன்றாடம் சந்தித்து உரையாடி உற்சாகமும், ஆதரவும் அளித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர். வன்னியரசு மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கும் எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம். எமக்கு அடுத்த அறையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் விடுதலையடைய வாழ்த்துகிறோம்.
மேலும் கடந்த மே 29ந் தேதி தமிழக அரசு பாஜக அழுத்தத்திற்கு அடிப்பணிந்து என் மீதும் (திருமுருகன்-மே 17 இயக்கம்), டைசன், இளமாறன், அருண் ( தமிழர் விடியல் கட்சி) ஆகியோர் மீதும் அராஜகமான ஒடுக்குமுறையை ஏவி “குண்டர் தடைச் சட்டத்தை” பாய்ச்சியது. இந்த அடக்குமுறையைக் கண்டித்து போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தோழர்கள் அரங்க. குணசேகரன், பொழிலன், கோவை கு. இராமகிருட்டிணன் மற்றும் இதர இயக்கத் தோழர்களுக்கும் எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம்.
இந்த அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு சிறையில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அய்யா. வைகோ அவர்களுக்கும், போராட்ட அழைப்பைக் கொடுத்து எதிர்ப்பினை வலுப்படுத்த முயற்சி எடுத்து வரும் தோழர். வேல்முருகன் அவர்களுக்கும், பாஜக வின் பின்னனி அரசியல், தமிழக அரசின் பலவீனமான பினாமி அரசியலை அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும், பாஜக அரசின் பாசிசத்தை அம்பலப்படுத்தி கண்டனம் வெளியிட்ட தோழர்கள் ஜவாஹிருல்லா(தமுமுக), தெகலான் பார்கவி (எஸ் டி பி ஐ) ஆகியோருக்கும் மற்றும் கண்டன அறிக்கை வெளியிட்டும், தொலைக்காட்சி விவாதத்தில் எதிப்புகளை பதிவும் செய்து பாஜக வை அம்பலப்படுத்திய தோழர். வேல்முருகனுக்கும், தோழர். சீமான் ஆகியோருக்கும் விடுதலை இதழில் அடக்குமுறையை பதிவு செய்து கண்டித்த அய்யா. வீரமணி அவர்களுக்கும் ஜனநாயக உரிமைக்கு ஒற்றைக்குரலில் பதிவு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
முக்கியமாக படைப்பாளிகளின் உணர்வினை வெளிப்படுத்தி, அடக்குமுறையைக் கண்டித்த இயக்குனர்கள் அய்யா. பாரதிராஜா, அமீர், பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், ராம், பிரம்மா, கமலக்கண்ணன், கெளதமன் ஆகியோருக்கும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர். சுந்தர்ராஜனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறையிலும், நீதிமன்றத்திலும், சந்தித்து ஆதரவளித்த தோழர். வழக்கறிஞர் சுப்ரமணியன் (மதிமுக), வழ. ப. புகழேந்தி (தமிழ் தேச மக்கள் கட்சி), வழ. சுரேஷ், வழ. பாலாஜி (நாம் தமிழர் கட்சி), வழ. சாரநாத் ( விசிக), பாலாஜி (விசிக) மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தோழர் வழ. துரைசாமி, தோழர். குமரன், தோழர். மனோஜ் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். SDPI கட்சி வழக்கறிஞர்களை சந்திக்க இயலாமல் போனதற்கு வருத்தங்களை பதிவு செய்கிறோம்.
அதே சமயத்தில் அரசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல் அரசை aதனிமைப்படுத்திய இயக்கத் தோழர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், சமூக வலைதள பதிவர்கள் என பாசிச எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் ஆரத் தழுவி உரித்தாக்குகிறோம். தொடர்ந்து செய்திகள், விவாதங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி.
இச்சமயத்தில் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டு சிறையில் எம்முடன் நிற்கும் போர் குணமிக்க தமிழர் விடியல் கட்சியின் மூத்தத் தோழர்கள் டைசன், இளமாறன், அருண் மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
தொடர்ந்து போராடுவோம், தமிழர்கள் உரிமைகளை வென்றெடுப்போம்.

ரேசன் கடை, காவிரி உரிமை, கர்நாடக தாக்குதல், பண மதிப்பிழப்பு, சல்லிகட்டு, நெடுவாசல், கீழடி, மீனவர்கள் கொலை போன்ற தமிழின விரோத பாஜக வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் மே17 இயக்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, முடக்கிவிட முனையும் பாஜக- ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியலையும், ஆரிய இனவெறியை வீழ்த்திடும் பணியை மே 17 இயக்கம் சமரசமின்றி மேற்கொண்டு முன்னேறி செல்லும்.
நாம் வெல்வோம்!!

– திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்
புழல் சிறை.
7-6-2017
Read More