உளுந்து வடை செய்வது எப்படி?

உளுந்து வடை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் 
உளுத்தம் பருப்பு
2 பச்சை மிளகாய்
இஞ்சி 
உப்பு 
அரைமணி நேரத்திற்க்கும் குறைவாக உளுந்து பருப்பை ஊறவைத்தால் போதுமானது.பிறகு கலக்கிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கலக்கிய மாவை உள்ளங்கையில் தண்ணீரைத்தடவி தேவையான மாவை உருண்டையாக உருட்டி வைத்து வடையாக தட்டி அதன் நடுவில் துளையிட்டு, தயாராக இருக்கும் சூடான எண்ணெயில் மெதுவாக போட்டவும்.சட்டியின் அளவிற்க்கு ஏற்ப்ப வடைகளை நல்ல இடைவெளியில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் மாற்றவும், ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்
Read More

பன்மொழிக் கல்வி ஏன் அவசியம் - மொழிப்பிரியன்


கடந்த 19.11.2016 அன்று தேனி மாவட்டம் உத்தம்பாளைத்தில் நடந்த ”சிகரம் தொடுவோம்” என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கிட்டத்தட்ட 1400 பேர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மொழிப்பிரியன் அப்துல் ஹமீது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். PLUS
Read More

இன்று பால் தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரலையில் பேச 19H DEC, 2016


இன்று பால்  தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரலையில்  பேசி உங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களின் பிராத்தனை மூலம் விடுதலை பெற்று கொள்ளலாம்  19H DEC, 2016
Read More

பம்பிங் பொன்ஸ் (Pumping Sponce )

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை
முதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்.    அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும்.  இட்லி
 பதத்தில் குழைக்க வேண்டும்.  இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.

Read More

ஈழத்து பெண் சபறினா பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாகியுள்ளார்

பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபறினா கணேசபவன் என்ற ஈழத்து தமிழ் பெணே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

தலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு

நகைசுவை நாடகத்தின் பாகம் 01
Read More

ஆண்ட்ராய்டு vs ஐபோன்

பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-தனை பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்க ஒரு முடிவற்ற அளவிலான கருவிகள் கிடைக்கும். சாம்சங், எச்டிசி, சோனி, மோட்டோரோலா, எல்ஜி, ஹூவாய், இசெட்டிஇ போன்ற பல உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டே வருகின்றன. ஆப்பிள் கூட வழங்க ஒரு சில தேர்வுகள் கொண்டுள்ளது ஆனால் அது அளவு சார்ந்த வேறுபாடுகளில் மட்டுமே கிடைக்கும். ஆண்ட்ராய்டு சிறந்ததாக திகழ இதுவொரு வலுவான காரணியாக இருக்கலாம். ஐஓஎஸ் உடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு ஒரு சீரான மென்பொருள் மற்றும் வன்பொருள் அனுபவத்தை அளிக்கிறது, மற்றும் பராமரிக்க இயல்புநிலை பயன்பாடுகள் கட்டுப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது ஆண்ட்ராய்டு கருவிங்களை பயனர்கள் விரும்பும் ஒரு வழியில் கஸ்டமைஸ் செய்ய வழிவகுக்கிறது. உடன் பயனர்கள் வெவ்வேறு லான்ச்களை மற்றும் இலவச பயன்பாடுகளை நிறுவ முடியும். உடன் பயனர்கள் முற்றிலும் போனுடன் வரும் பேக்டரி செட்டிங்ஸ்தனில் மாற்றங்களை செய்யலாம். அதிக பயன்பாடுகள் வழங்குதல் அல்லது மேற்பட்ட வருவாய் உருவாக்குதல் என்ற இரண்டு அடிப்படையில் கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு நிலையான போர் பூட்டப்பட்டுள்ளது. எனினும் ஒப்பிடுகையில் ஐஓஎஸ் ஆப்ஸ்களை விட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் தான் 17 சதவீதம் அதிக பயன்பாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, 57 சதவீதம் இலவச பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு வழங்குகிறது, இது ஐஓஎஸ் வழங்கும் இலவச ஆப்ஸ்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை விட ஐஓஎஸ் ஆப்ஸ்கள் தான் அதிக வருவாய் ஈட்டுகிறது. ஆண்ட்ராய்டு சிறப்பானதாக செயல்பட இதுவொரு முக்கிய காரணமாகும். கூகுள் உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களை இணைத்துக் கொள்ள முடியும். இதுவழியாக அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் சென்று கூகுள் சேவைகளை பயன்படுத்த தங்கள் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துகிறார்கள். ஆப்பிள் பயனாளிகளால் கூட கூகுள் ஒருங்கிணைப்பை நிகழ்த்த முடியும் என்றாலும் கூட ஆண்ட்ராய்டு போன்ற ஆழமான பயன்பாட்டை அணுக இயலாது. வெவ்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் என்பதால் ஐஓஎஸ் பயனர்களுக்கு போலல்லாமல் ஒரு மலிவான ஸ்மார்ட்போன் தேர்வு நிகழ்த்த ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பிகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவிலான போன்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.
Read More

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க.  முதலில்Skype Downloard பண்ணவும்  பின்னர்  இத்தளத்தில் இணைந்து  உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு  செய்து  கொள்ளுங்கள்தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்..  பேசுங்க.பேசிகிட்டே  இருங்க   இங்கே 

Read More

ஐபோன் 7Sல் உள்ள சிறப்பம்சங்கள்

செல்போன்கள் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஐபோன் நிறுவனமானது தனது பத்தாவது ஆண்டையொட்டி ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S ப்ளஸ் ஆகிய போன்களை விற்பனைக்கு விடவுள்ளது.

ஐபோன் 7Sல் சிங்கிள் சென்ஸ் கமெராவும், ஐபோன் 7S ப்ளஸ்ஸில் டூயல் லென்ஸ் கமெராவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதன் டிஸ்ப்ளே அங்குலம் 5.0 மற்றும் 5.8 வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போன்கள் IOS A11இயங்குதளம் மற்றும் பியூசன் சிப்செட் இயங்குதளத்தில் இயங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

ஐரிஸ் ஸ்கேனர் என்னும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச்சுகளில் இருக்கும் ஓஎல்இடி திரை இதில் இருப்பதால் இதில் படங்கள் துல்லியமாக தெரியுமாம்!.

இந்த வகை ஐபோன்களின் விலை $649 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

இந்த காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதுடன், அறியாமல் சில தவறுகளை செய்து விடுவார்கள்.
மேலும் மாதவிடாய் காலத்தின் போது, பெண்களின் ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அதிக எரிச்சல் மற்றும் கோபமாக நடந்து கொள்வார்கள்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் ஒருசில மோசமான தவறுகளை அவர்களுக்கு அறியாமலே செய்து விடுவார்கள் அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
  • மாதவிடாய் காலத்தில், அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட நமது உடலுக்கு தேவையான ஆற்றலை நாம் சாப்பிடும் உணவுகள் வழங்குகின்றது. எனவே நமக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இதனால் கடுமையாக வயிற்று வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • மாதவிடாய் காலத்தில் நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஜங்க் உணவுகளை தவிர்த்து, நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால், பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கள் மூலம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்காமல் இருப்பார்கள். இதனால் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் காலத்தில் நன்றாக தூங்குவது மிகவும் நல்லது.
  • பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம் எனபதால், அந்த நேரத்தில் மட்டும் பெண்கள் வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
  • பெண்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணியானது, நோய்த் தொற்றுகள் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே துணிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Read More

விந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்


பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து பார்ப்பது இயல்பான ஒன்றாகும். மருத்துவர்கள் விந்தணு பரிசோதனை செய்யும் போது, ஆண்களின் விந்து சாம்பிள் எடுத்து தர வேண்டும் என்று கூறுவார்கள். இதனால் மருத்துவமனையில் தரப்படும் அறைக்கு வெளியே அல்லது மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் அல்லது கழிப்பறைக்குப் போய் தான் விந்தணு சாம்பிள் எடுக்க வேண்டும்எனவே இது மாதிரியான சிக்கல்களை போக்க, மெடிக்கல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், யோ என்ற கைகளுக்கு அடக்கமான ஒரு சாதனத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த யோ என்ற சாதனமானது, ஐபோன் அல்லது சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் போன்களுடன் பொருத்தக்கூடியது. எனவே இந்த சாதனத்தை வீட்டிலேயே வைத்து, ஆண்களின் விந்து திரவத்தில் இருக்கும் விந்தணுக்களின் நீந்தும் வேகம், அடர்த்தி, எத்தனை சதவீத அணுக்கள் செயல்படாமல் இருக்கின்றன என்பது போன்ற சில விபரங்களை கண்டுபிடிக்க முடியும். யோ என்ற சாதனத்தில் ஒரு கண்ணாடித் தகடு, விந்தணுக்களை உறிஞ்சும் பிப்பெட் மற்றும் ஒரு நுண்ணோக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் இருக்கும் நுண்ணோக்கியை மொபைல் கேமராவுடன் இணையுமாறு பொருத்தி, பின் கண்ணாடித் தகடில் விந்து திரவத்தை வைத்து, யோ சாதனத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மொபைல் செயலியானது, விந்தணுக்களின் தன்மை பற்றிய அனைத்து விவரங்களையுமே கொடுத்து விடுகிறது. மேலும் செயற்கை கருத்தரிப்பை விரும்பும் தம்பதிகளுக்கு, இந்த யோ சாதனமானது மிகவும் பயன்படக் கூடியதாக உள்ளது.
Read More

விஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்

நண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில் ‘வடக்கின் தீர்மானம் குப்பைத் தொட்டிக்குள்’ என்ற தலையங்கத்தின் கீழும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இது முற்றிலுந் தவறு. எனக்கு நன்றாக அறிமுகமான ஒருவரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் மேற்படி கூற்றை வெளியிட முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அவ்வாறில்லாமல் தவறான செய்திகளை முன்வைத்து தவறான கருத்துக்களை பாராளுமன்றத்தில் பதிய வைப்பது கவலைக்குரியதாக அமைகின்றது. பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டத்திற்குப் புறம்பாக, சட்ட அனுமதி பெறாமல், பலாத்காரமாகப் புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே நாங்கள் கண்டிக்கின்றோம். புத்தர் சிலையென்ன, இந்துத் தெய்வங்களின் சிலையென்ன, கிறீஸ்தவர்களின் சிலை என்ன வேறெந்த மதத்தவர் சிலையென்றாலும் சட்டப்படி அமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். தான்தோன்றித்தனமாக அமைத்தால் அதற்கு எங்கள் ஆட்சேபணையைத் தெரிவிக்கத் தயங்கவும் மாட்டோம். அமைச்சர் விஜேதாச அவர்களின் கூற்றுக்கள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கே ஆத்திரமூட்டியுள்ளன. சொல்லாததைச் சொன்னதாகக் கூறிக் குற்றஞ் சாட்டினால் யாருக்குத் தான் ஆத்திரம் வராது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயங்கள் எவ்வாறு சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, அதன் பின்னர் அவற்றுள் பெரும்பான்மையானவை மீளக் கட்டப்படவில்லை போன்றவை பற்றியெல்லாம் திரு.இராஜபக்ச அவர்கள் அறியாதவராக இருக்க முடியாது. இந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் தெற்கில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பௌத்தர் அல்லாதோர் வசிக்கும் இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த கோயில்களைத் தனியார் காணிகளில் கட்ட முற்படுவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் சிங்கள அகராதியின் ஆசிரியர் வணக்கத்திற்குரிய கலாநிதி அகுரடியே நந்தா தேரோ அவர்கள் வேறு இரு பௌத்த பிக்குமார்களுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் கூட பௌத்தர் இல்லாதோர் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக புத்த சிலைகளை நிர்மாணிப்பதைத் தாம் கண்டிப்பதாகக் கூறினார்கள். சட்டப்படி மனுச் செய்து எந்த மதத்தினரும் உரியவாறு தமது வணக்கஸ்தலங்களை வடமாகாணத்தில் அமைக்கலாம். சட்டத்திற்குப் புறம்பாக அமைப்பது பற்றியே நாங்கள் கருத்துத் தெரிவித்தோம். நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்
Read More

ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர்மம்???

ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர்மம்???
Read More

ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை செய்ய நினைப்பவர்களுக்கு இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி இருந்தால் போதுமாம்! தற்போது பெரும்பாலானா பண விடயங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே நடைபெறுகின்றன. இது பல்வேறு வளைதளங்கள் மூலம் அதிகளவில் நடைபெறுவதால் இந்த முறைகேடுகளை கண்டுபிடிப்பது முடியாத காரியமாகும். முதலில் கார்டு எண்ணை டைப் செய்து, பின்னர் கார்டின் முடிவு திகதி மற்றும் வருடத்தை டைப் செய்து விட்டால் முக்கிய நம்பரான CVV நம்பர் திரையில் காட்டும். இதன் மூலம் ஹேக் செய்து மோசடியில் ஈடுபட முடியும். இது நம்பர்களை பெறுவது எப்படி ஹேக்கர்களுக்கு சாத்தியமாகிறது? ஒருவர் பலமுறை முயன்றும், யூகித்தும் ஒரு கார்டின் தகவல்களை பெற முடியும். இது 10 அல்லது 20 முறை முயற்சித்தாலே பலருக்கு சாத்தியபடுகிறது என நியூ காசில் பல்கலைக் கழகத்தின் முனைவரான முகமது அலி கூறுகிறார். இன்னொரு வழியாக இணையதளம் மூலம் செலுத்தப்படும் பல விதமான பேமண்ட்டுகள் விபரத்தை வைத்தும் கார்டு நம்பர் பற்றிய தகவல்கள் ஹேக் செய்யபடுகின்றன. முதல் ஆறு இலக்க விவரங்களைத் தவிர எந்த விவரமும் இல்லாமல் தொடங்கப்படும் முயற்சியும் கூட கார்டின் வகையையும் வங்கியின் விவரத்தையும் தரும். இதை வைத்து கூட மோசடி செய்யப்படலாம். கார்டு வைத்திருப்பவர்கள் அதில் இருக்கும் உச்சவரம்பு பணத்தை குறைவாக வைத்து கொள்வதே இதை சமாளிக்க சிறந்த வழி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
Read More

நாங்க வேற மாறி Bro Tamil Christian Song Pas John Jebaraj

Kora Solla Maaten
Ade Kuthan Solle Maathen
Mathavanga Thalayila Kotta Maaten Bro
Naan Maatum Rightu
Mathavanga Thappu
Nyayan Theeerkum Oozhiyatta Seiyamaataen Bro-2x

Keezha Vizhuinda Thookuvan Bro
Yesuvin Oozhiyatta Seinga Bro-2x
Naanga Vaera Maari Vaera Maari Vaera Maari Bro
Naanga Vaera Maari Bro-3x
Naanga Yeasu Maari Bro

Sathuruva Kandu Odida Maataen
Vasanatha Vachaey Adipaen Bro
Goliatha Kandu Pin Sella Maataen
Nethiyila Kurivachu Thookiduvaen Bro-2x

Eettium Pattayamum Yenakkilla Bro
Yesuvin Nammathil Thiikiduvaen Bro-2x
Naanga Vaera Maari Vaera Maari Vaera Maari Bro
Naanga Vaera Maari Bro-3x
Naanga Yeasu Maari Bro

Read More

ஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவில்

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மற்றும், தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 வயது மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை பெறும் உயர்மட்டக்குழு விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு குடியுரிமை வழங்கும் குழுவிலும் அங்கம் வகிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தை மாதம் முதல் தனது பணியை தர்சிகா கிருஸ்ணானந்தம் ஆரம்பிக்கவுள்ளார். அவருக்கான கடிதம் தூண் நகராட்சியினால் இன்று வழங்கப்பட்டுள்ளது, அந்த நகராட்சியில் குடியுரிமை வழங்கும் உயர்மட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் முதலாவது புலம்பெயர் பெண்மணியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Donald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி ?

Donald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி ?தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONALD TRUMP PRESIDENT OF USA TAMIL
Read More

Rajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தது.சீமான் சீற்றம்

Rajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தது.சீமான் சீற்றம்
Read More