ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?


ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம்
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

முனைங்கின் அசத்தலான பதில்கள்

 வலை வரலாறில் முதல் முறையாக பதில் அளித்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய  முனைங்கின் அசத்தலான பதில்கள்
 
சிங் சொங் :- வலைப்பூவை பறிக்கமுடிமா ??  
 

முனைங் :-  படிக்கமுடியும் 



சிங் சொங் :-  தமிழில் வலைப்பூவை நிர்வகிக்க தமிழ் தெரிய வேண்டுமா ???

 

 

 

முனைங் :- இல்லை.. Copy  பண்ணி Paste    பண்ண  தெரிந்தால்   போதும் 


சிங் சொங் :- மகிந்தராஜபக்சவுக்கு எய்ட்ஸ் வருமா ??
         

முனைங் :- ஏக்கம் வரும் 

 

சிங் சொங் :-  நீங்க ஒரு பல் டாக்டரா...?"
       

 முனைங் :- இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்...!"



  சிங் சொங் :-  விடிய விடிய டீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர    முடியுமா...??

முனைங் :-இப்படி  கேட்டால்  நான் அழதுடுவன்


பழைய நகைச்சுவை இடுகைகள்

 

சிலந்தி மனிதன் 007

 

கம்மல் கம் கிம் ஹிஹி டாட் காம்

 






அதுக்கு இத்தனை கடினமா ???

 மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள்  நிறைந்து என்பதை  நகைச்சுவை உடன்  குறும்படம் ஒரு யட்டிக்காகவா??

எனது இணைய இணைப்பை யாரெல்லாம் பாவிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள

முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.

நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.

மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்

இலங்கை இராணுவம் தமிழ்   மக்கள் மீது பலவிதமான முறையில் இன அழிப்பை   மேற்கொண்டது யாவரும் அறிந்ததே.  அதில் ஒரு   புதிய விடயத்தை  இப்போது  பகிர்ந்து  கொள்கின்றேன். 1990 - 1995 ஆண்டுவரை யாழ்ப்பாணம் புலிகளின் ஆளுமைக்குட்பட்டு   இருந்தது.அப்போது நான் 5 ஆம் வகுப்பு கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.  இலங்கை அரசாங்கத்தினால் மின்சார, பொருளாதாரத தடைகளையும் விதிக்கப்பட்டுருந்தது.  மாதம் ஒருமுறை இலங்கை  அரசாங்கத்தினால் அனுப்பப்படும் உணவே அனைவருக்கும்  பகிரப்படும்.     எனது பிறந்த நாளை விமர்சையாக  கொண்ட்டாட  எனது பெற்றோர்  முடிவு  செய்தனர்.     இவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் பலவிதமான  கேக்கு, இனிப்புப்  பண்டங்கள் என்பன செய்தார்கள்.  எனது பாடசாலைக்கும்  இனிப்புப் பண்டங்களுடன் அனுப்பி வைத்தார்கள்.  நானும்
மிக  சந்தோசத்துடன்  பாடசாலைக்குப்  போனேன்.  பாடசாலை ஆரம்பித்து 15 நிமிடங்களில் வானில் இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள்  பாடசாலையை அண்டி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.  இதனால் மாணவர்களும், ஆசிரிகளும் கால் போன போக்கில் ஓடினார்கள்.  நான் தனியே எங்கே ஓடுவது   என்று  தெரியாது அழுது கொண்டிருந்தேன். விமானத்திலிருந்து பாரிய  சத்தத்துடன்  ஒரு  குண்டு விழுந்த்தது. உடனே அருகிலுள்ள வீடுக்குள் ஒழித்துக் கொண்டேன்.  அங்கு யாரும் இருக்கவில்லை.  அடுத்த குண்டுச் சத்தம் என் நெஞ்சைப் பிளந்ததுடன் மிக அருகில் விழுவதுபோல் உணர்ந்தேன்.  எனவே என்ன நடந்தாலும் வீட்டிற்கு போவது என முடிவெடுத்தேன். வீட்டை நோக்கி ஓடினேன்.  நான் எனது வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் நான் ஒருபோதும் <  பார்த்திராத ஒரு நபர் வெள்ளை ஆடை அணிந்து மிக அழகாக நின்றுகொண்டிருந்தார்.  அவர் வந்த வழியாலே திரும்பி ஓடு தம்பி எனக்  கூறினார்.  நான் எனக்கு அருகில் நின்றவரிடம் இவ்வழியால் போகவேண்டாமாம் எனக் கூறினேன்.  அவர் யார் உனக்கு சொன்னது இங்கு உன்னையும் என்னையும் தவிர யாருமேயில்லை.  நீ சின்னப் பெடியன் உனக்கு என்ன தெரியும் நீ பயத்தில் ஊளராதே என்னுடன் வா என்றார்.  நான் முடியாதெனக் கூறி வந்த  வழியால் திரும்பி ஓடிவிட்டேன்.  ஓடி சிறுது தூரத்தின்  பின்னர் ஒரு குண்டுச்  சத்தம் கேட்டது.  அந்த  மனிதர்  போன பாதையில் விழுந்தது.  அவர் இறந்துவிட்டார்.அன்று என்னை வழிநடத்தியவர் ஆண்டவராகிய ஜெசுவே
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு


ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும். அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள் சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் தோன்றும் .

கருணாநிதின் தமிழ் பணி அம்பலம்

பெரிதாக பார்க்க மேலுள்ள பந்தியில் கிளிக்  பண்ணவும் 
ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இப் பெண்ணின் வயது 19 ஆகும். அவர் யாழில் உறவினர்களுடன் வசித்துவந்தார். இப் பெண்ணை முதலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 3 கிழமைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சைக்காகச் சென்றபோது அவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மனம் உடைந்த நிலையில் இருந்ததோடு அவரை உறவினர்களும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவிட்டனர். ஒரு ஏஜன்டின் கைகளில் மாட்டிக்கொண்ட அப்பெண்ணுக்கு பல கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது "துன்பத்தைத் தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு" என்று கூறுவதுபோல உனக்கு இந்த வருத்தத்தை தந்தவர்களுக்கு நீ அதனைத் திருப்பிக்கொடு என்று சிலர் கூறி அவரை மூளைச் சலவை செய்துள்ளனர்.

அதனால் அப் பெண் இலங்கை இராணுவம் சென்றுவரும் விபச்சார விடுதி ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நோக்கம் முழுவதும் தனக்கு பரவிய நோயை எல்லா இராணுவத்துக்கும் பரப்புவது என்பது தான். ஒரு பழிவாங்கலைப் போல அப்பெண் தன்னை வருத்தி இச் செயலில் ஈடுபட்டுள்ளார். நாட்கள் கடந்தோடிய நிலையில் நோய் முற்றியிருக்கவேண்டுமே இதுவரை எயிட்ஸுக்கு மருந்து எடுக்கவில்லையா என நெருங்கிய தோழி ஒருவர் கேட்டபோது அப் பெண் திரும்பவும் வைத்தியசாலை சென்றுள்ளார். குறிப்பிட்ட அந்த சிங்கள வைத்தியர் அங்கு இல்லாத காரணத்தால் அவர் வேறு ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் இருப்பதற்கான எந்த அறி குறியும் காணப்படாததால் சந்தேகமுற்ற மருத்துவர் அப்பெண்ணை மீண்டும் ரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற பேறுகளால் அப்பெண் ஆடிப்போயுள்ளார். குறிப்பாகச் சொல்லப்போனால் இன்றுவரை அவருக்கு எயிட்ஸ் நோயின் தாக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னர் அங்கே இருந்த சிங்கள டாக்டரின் பெயரும் தெரியாது, பரிசோதித்த டாக்டர் ஏன் தான் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக அறிவித்தார் என்பது எல்லாம் அப் பெண்ணுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. தான் அனாதரவாக இருந்தபோது தன்னை அரவணைத்து புத்திசொல்வது போல பாழுங்கிணற்றில் தள்ளிய நபர்கள் மாயமாக மறைய. உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகில் இராணுவ உதவியோடு இயங்கும் அந்த விபச்சார விடுதியைக் காட்டிகொடுக்கவும் முடியாது இப் பெண் தத்தளித்துள்ளார். தற்போது அவர் இந்தியா சென்று அங்கே நிம்மதியாக வாழ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் உதவி புரிந்துள்ளார்.

இதில் வேதனையான விடையம் என்னவென்றால் இந்த வங்கி ஊழியரும் ஒரு காலத்தில் இப் பெண்ணிடம் சென்றவராம். தமிழர் என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு சிங்களவர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை தற்செயலாகக் கண்ட அவர், இப் பெண் கூறிய சோகக்கதையை அரை குறையாக விளங்கிக்கொண்டு இந்த உதவியைச் செய்துள்ளார். சென்னை சென்றதும் பெண்கள் நல வாரியத் திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கு உதவுவதாக செல்வி ஜெயலலிதாவின் அரசு தெரிவித்துள்ளது பெரும் நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளதாக அவர் அதிர்வு நிருபருக்குத் தெரிவித்துள்ளார்.  
நன்றி அதிர்வு

வலைப்பூக்கள் ஒரே தளத்தில்

 தமிழர்களுக்காக    தமிழில் உள்ள முன்னனி இணையத்தளங்கள்  வலைப்பூக்கள்   ஒரே   தளத்தில். நன்றி பூவரசு எனது தளத்தையும் இணைத்தமைக்கு கண்க பூவரசு


உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

இதயத்துடிப்பினிலே.....  

எங்களை விட்டு இறைவனடி சென்றீர்களே!

அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம்

உம்மைக் காணாது நிலை தடுமாறி நின்றோம்

பாசமுள்ள பிள்ளைகளை நேர்வழிகாட்டி விருட்சமாக்கி

பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!

குடும்பத்தின் வழிகாட்டியாகவும் பாசத்தின் ஒளி விளக்காகவும் இருந்த

நீங்கள் பிரிய மனம் வந்ததோ!

அன்பு மொழி பேசி எங்களை மகிழ வைப்பீர்களே!

உம் அன்பு மொழி எப்போது கேட்போம்!

உம் பிரிவால் முகம் வாடி நிற்கின்றோம்

உம் இறுதி மூச்சில் எத்தனை ஏக்கங்களுடன் சென்றிரோ!

ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டகலாது

உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

இக் கவிதை இந்திய அமைதி படையால் கடுமையாக தாக்கி  இறந்த என் அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்

திருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார் தமிழீழ தேசியத் தலைவரான பிரபாகரன்.

அண்மையில் மதுரையில் உள்ள பெரியார் நகர் பேரூந்து நிறுத்தத்தில் சுவரொட்டி ஒன்றைக் காண நேரிட்டது. அது ஒரு திருமண நிகழ்வு வரவேற்பு சுவரொட்டி அதன் வலது பக்கத்தில் கம்பீரமாக காட்சியளித்தார் பிரபாகரன்.

தற்போது அரசியலையும் தாண்டி தமிழகத்தில் திருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார் தமிழீழ தேசியத் தலைவரான பிரபாகரன். இதன் மூலம் தமிழக மக்கள் தலைவர் மேல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதை தெளிவாகப் புலனாகிறது.

பிரபலமான மனிதர்களின் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு..


லக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள் தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது.
சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது. உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான். வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம் முக்கிய குறிப்பு =என்னைப்பற்றி அறிய இத்தளத்தில் தேடாதிங்க நான் இத்தளத்தில் உள்ளவர்களை விட  ரொம்ப பிரபல்ம்முங்கோ  அதுக்கு தான் இருக்கு google profile

இங்கே

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக கட்சிகள் வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே!


இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள்  உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.


 இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.


 இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தை தெரிவித்தன, இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கான்சல் ஜெனரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.
 2007 நவம்பர் 20-ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரûஸயும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். 
 நன்றி eu

சுடர்தனை கேட்டால்





















கடலினைக் கேட்டால் என்  காதலினைச் சொல்லும் 
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை  கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப்  பார்த்தால்  உன் முகம்  பெண்ணே 
கண்ணென்றிருந்தால்  உன்னையே காணும்
எங்கும்  நீ தான் என் செல்லக் கிளியே!!!