ஒரே திரட்டியில் அனைத்து அரட்டைத் தளங்களும்

 இன்றைய உலகில் நாளுக்கு நாள் பல புதிய சோசியல் தளங்கள் அறிமுகமாகி  வருகிறது.  அதிலும் அரட்டை தளங்கள் ஆன யாஹூ messenger ,  google டாக், msn ,  facebook மற்றும் பல இதில் நமது நண்பர் ஏதாவது ஒரு சமூகத்தளத்தில் இருக்கும்போது,  நாம் வேறொரு சமூகத்தளத்தில் online  இல்  இருப்போம்.   இருவரும் ஒரே சமுக தளத்தில் online இருந்தால்தான் chat பண்ண முடியும்.   ஏதாவது ஒரு சமூகத்தளத்தின் முகவரி, கடவுச்சொல் என்பன கொடுத்து உள் நுழைந்தால் போதும் உமது நண்பர்  எந்த சமூகத்தளத்தில் online  இருந்தாலும், அரட்டை அடித்துக் கொள்ளலாம்.

 இதில்
Read More

தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க

அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது.
அப்படிப்பட்டவர்களுக்கெனவே

உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட  புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது.

இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது. நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்

Read More

இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும்போது !

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.
ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே

நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.

1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.

2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.

3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.

4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.
Read More

காதலர் தினம்

 பல யுகங்கள்  சென்றாலும்
அழியாது   காதலர் தினம்
இரு மனங்கள் ஒன்று சேரும்
இன்றைய தினத்தில் இன்பங்கள்
 பொங்கட்டும் இதயங்களில்
Read More

பேஸ்புக் முகவரியை மாற்ற

நம்மில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் எண்ணும் சமூக வலை தளத்தில் உறுப்பினர்களாக உள்ளோம்.

நாம் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது ஏதோ ஆர்வக் கோளாறில் ஒரு பெயரை கொடுத்து பதிந்து விட்டு இருப்போம். ஆனால் தற்போது நீங்கள் அந்த பேஸ்புக் முகவரியை மாற்ற நினைத்தால்

உங்களுக்கான பதிவு தான் இது. முகவரியை மாற்ற
1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
2. இப்பொழுது கணக்கு(Settings) பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் (Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டதை போன்று விண்டோ தோன்றும்.
4. அதில் உள்ள பயனர் பெயர் என்ற பகுதியில் உள்ள மாற்று என்ற லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் புதிய பெயரை கொடுத்து கிடைக்கிறதா என்று சோதிக்கவும். கவனம் இருக்கட்டும் இதை நீங்கள் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். ஆகவே யோசித்து சரியான பெயரை கொடுத்து எழுத்துக்களை சரிபார்க்கவும்.
5. உங்கள் புதிய பெயர் கிடைத்தவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் அதில் உள்ள உறுதிபடுத்தவும் என்பதை க்ளிக் செய்த உடன் உங்களின் பேஸ்புக் முகவரி மாறிவிடும்.
Read More

புதிய ஸ்டைல்


categories: , , , , , ,

இரண்டு ரப்பர் சில்லடா !!!!!
காற்றைக் குடிக்கும் சில்லடா !!!!
எம் பாரம் சுமக்கும் சில்லடா  !!!!
உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!!!!!!!!!
ஏழைகளின் வாகனம்
புதிய  ஸ்டைல் எல்லாம் மக்கள் கவனத்தை தங்கள் மீது திருப்ப புதிய உத்தி
பூக்கள் சூடப்பட்டுள்ளது
Read More

பாலியல் டேட்டின் தளத்தில் உங்களது !!!!!!!!!

நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்.
பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங் தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது. லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில்
 இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.
இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விடயமாகும். "உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும்" என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே.
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும் அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்.
Read More

இணையதளத்தையும் நம் மொபைலில் பார்க்க


கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் பார்க்கலாம்.
எதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான் வல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும் சொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்

உருவாக்குபவர்கள் கணனியில் தங்கள் தளம் தெரிவதற்கும், மொபைலில் தெரிவதற்கும் தனித்தனியாக தான் உருவாக்கி கொண்டு இருக்கின்றனர்.
பல நிறுவனங்களும் இதற்கு போட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க சரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது. ஆம் உங்கள் தளங்களை மட்டும் கொடுங்கள். நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி காட்டுகிறோம். யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே.
சில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம் என்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத அளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி இருக்கும்.
இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க விரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம் வேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு எழுத்தை மட்டும் பார்க்கலாம்.
இங்கே
Read More

ஒபாமாவுக்கும் கவலை !!!!!!!!!

பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு உள்ள வழக்கமான கவலை தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் வந்துள்ளது.
அண்மையில் பிரார்த்தனையில் கலந்து கொண்ட அவர் தனது மூத்த மகள் தொடர்பாக ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்துள்ளார். அதாவது 12 வயதான தனது மகள் மலியா முதன் முறையாக ஒரு நடன போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த போட்டியை அனைவரும் காண உள்ளனர். குறிப்பாக இளைஞர்களும் கண்டு களிக்க உள்ளனர். எனவே மற்றவர்கள் பார்த்து முகம் சுழிக்கும் படி குட்டைப் பாவாடை அணிந்து கொள்ளக் கூடாது என்பது தான்.
சிறப்பாக செயல்படுவதற்கான வலிமையைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுவதும் உண்டு. ஆனால் தற்போது நீளமான பாவாடை அணிய வேண்டும் என்பதே வேண்டுகோள் என்றார்.
Read More

பெண்ணினத்தை

பெண்ணினத்தை அவமதித்துப்
பெருமை பெற நினைத்தவர்கள்
பெரும்பாவச் சுமையேற்றுப்
பெற்ற துன்பம் உலகறியும்
எண்ணி எண்ணிப் பெண்
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில்
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 
Read More

ஒரே இடத்தில் இலட்சக்கணக்கான ஒலிகளை கேட்க

இவ்வுலகில் பல வகையான ஒலிகள் உள்ளன.
இவற்றில் அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இவ் இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்க எமக்கு நேரமும் இல்லை.

எனினும் இலட்சக்கணக்கான ஒலிகளை ஒரே இடத்தில் அடக்கி வைத்துள்ள இணையத் தளமொன்று உள்ளது.
இத்தளத்தில் அவற்றை கேட்டு இரசிக்க முடிவதுடன் தரவிறக்கம் செய்து கொள்ளவதும் முடியும்.

இயற்கையின் ஒலிகளை உங்கள் காதுகளுக்கு எட்டச்செய்யும் இத்தளத்தில் உங்களுக்கு தேவையான ஒலி வடிவத்தினை தேடிப்பெற்றுக்கொள்ளவும் முடியும். சுமார் 20 இலட்சம் வித்தியாசமான ஒலிகள் இத்தளத்தில் உள்ளன. எந்த பார்மெட்டில் வேண்டுமே அந்த பார்மெட்டில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
இங்கே 
Read More

தமிழின மீனவர்கள் அதிர்ச்சி தகவல்


கொழும்பிற்கு அண்மையிலுள்ள இரகசிய முகாமிலிருந்து வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை என்னுள் உருவாக்கியது. தொலைபேசியில் அழைத்தவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன்.
‘அண்ணா, உங்கள் தொடர்பு மட்டும்தான் கிடைத்தது. இந்தத் தகவலை எப்படியாவது வெளிப்படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால்,
எங்களது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்ற அவரது குரலில் பதற்றமும், படபடப்பும் அதிகம் காணப்பட்டது.
அவர் தெரிவித்த தகவல் இதுதான்:
சிறிலங்கா கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல், படுபொலைகள் காரணமாகத் தமிழகம் கொதி நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் அவர்களை கொழும்பிற்கு அனுப்பி நிலமையைப் புரிய வைத்துள்ளது.
தமிழகத்திற்கான சட்ட சபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடைபெற்று வரும் சம்பவங்கள் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கும் என்பதே மத்திய அரசின் அவசரமான கண்டனங்களுக்கும், நிருபாமா ராவ்வின் கொழும்பு விஜயத்திற்கும் காரணமாக அமைந்தது. சிறிலங்கா அரசும் தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதையே விரும்புகின்றது. இதனால், சிறிலங்கா அரசு மிகப் பெரிய சதி நடவடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
‘ஒப்பரேஷன் கடல் சிங்கம்’ என்ற குறியீட்டுப் பெயருடன் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடுப்புக்களில் சிறிலங்காவின் கடற்படை வழங்கும் படகில் அவர்கள் தமிழக மீனவர்கள் நடமாடும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும். அந்த வேளையில் அங்கு பிரசன்னமாகும் சிறிலங்கா கடற்படை அவர்கள்மீது தாக்குதல் தொடுக்கும்.
அதில், அவர்களுக்கு உயிர் ஆபத்து நிகழாது என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்படும் இவர்கள் மீண்டும் சிறீலங்காவுக்கு அழைத்து வரப்பட்டு, இதுவரை இவர்களே தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என்ற விதத்தில் விசாரணை நடாத்தப்பட்டு, இந்தியாவுக்கும் தகவல்கள் வழங்கப்படும்.
இதுவே, ‘ஒப்பரேஷன் கடல் சிங்கம்’ நடவடிக்கையின் நோக்கமாகும்’ என்று அவர் தெரிவித்ததுடன் அவரது இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
அவராக இணைப்பைத் துண்டித்துக் கொண்டாரா? அல்லது, இந்தத் தகவலை வழங்கிய போது படைத் தரப்பிடம் சிக்கிக் கொண்டாரா? என்பது தெரியவில்லை.
தமிழக மீனவர்கள்மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடாத்தவே இல்லை என்று நிராகரித்த சிங்கள அரசு, மூன்றாவது சக்தி ஒன்று இந்தத் தாக்குதல்களை நடாத்தி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது, இந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை ஒருவேளை உறுதி செய்வதாகவும் இருக்கலாம்.
2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு, மேற்குலகின் இறுதி நேர மீட்பு முயற்சியையும் தடுத்து நிறுத்தியது.
அதே வேளை, தமிழகத்து மக்கள் பொங்கி எழுந்து கிளர்ச்சியில் இறங்காதவாறு தமிழக முதல்வரும் தன் பங்கிற்கு சிங்கள அரசுக்கு உதவி புரிந்துள்ளார். அண்மைக் காலமாக சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில், தமிழக மக்களின் அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வருமானால், அதில் அங்கம் வகிக்கும் தமிழீழ அபிமானிகளால் தாம் நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை சிறிலங்கா அரசு உணராமல் இல்லை. எனவே, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதையே சிறிலங்கா அரசு விரும்பும் என்பதால், இந்தத் தகவலைப் புறக்கணிக்க முடியாது.
அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தின் தமிழின உணர்வாளாகளின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம். விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைக்கலாம் என்பதே இந்த ‘ஒப்பரேஷன் கடல் சிங்கம்’ நடவடிக்கைக்கான அவசியமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமிழ் வின் தளத்தில் இருந்து  இங்கே
Read More

உங்கள் பேஸ்புக் வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால்


பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?

இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

Read More